Friday, 8 June 2018

அவன் போட்ட கணக்கு


“டீ யாரோ காலிங் பெல் அடிக்கறா போல இருக்கு பாரேன் “
“ ஏன்னா எதோ சீதா கல்யாணம் பண்றாளாம். கைலயிலே
மஞ்சபை டைரி எடுத்துண்டு ஒரு மாமா வாசலிலே வந்து நிக்கறார் “
“சரி சரி போயுட்டு நாளை கார்த்தாலே வரச்சொல்லு ; நாம இங்கே
இருக்கோம்னு எப்படி தெரியுமாம் ?”
“கீழே ground floor லே யாரோ சொன்னாளாம் ;ஒரு அம்பதோ நூறோ
கொடுத்து அனுப்புவேளா அத்தவுட்டுட்டு “
“இல்லேடி ஸ்ரத்தையா பண்றான்னா நாளைக்கும்  வருவார் “

இங்க அபார்ட்மென்ட் வாங்கி குடி வந்து இப்பதான் பத்து நாள்
ஆறது, படிச்சி முடிச்சி வேலைக்கு மேற்கே போய் முப்பத்தைந்து
வருஷம் ஆயுடுத்து . ரிடையர் ஆயி அங்கேயே இருந்திருக்கலாம் ,
ரயில்வே உத்தியோகம் .வருஷத்துலே மூணு செட் A,C, பாஸ் . வருஷா
வருஷம் தீபாவளிக்கு ஊருக்கு வந்தா, அடுத்து ரெண்டு நாளில் வரும்
தோப்பனார் ஸ்ரார்தம் முடிந்து கிளம்பணும். திரும்பவும் மே மாதம்
ஸ்கூல் லீவு வரும்போது ஒரு வாட்டி . சொந்த ஊரிலே ஒண்ணும்
கிடையாது , எனக்கு என்னவோ வர இஷ்டமில்லைதான் , இருக்கற
ஒரே பையனும் படிப்பு முடிந்து உத்தியோகம் ,கல்யாணம்
குழந்தைகள்ன்னு ஆயி  கிழக்கே இருக்கான் . இவதான் நம்ம ஊர்
பக்கமே போயுடலாம்னு சொல்லி இங்கே வந்தாச்சு . இங்கே ஒண்ணும்
சுத்தமா பிடிக்கலை . ஆத்திலே உக்காந்து Facebook whatsapp ன்னு
நேரம் ஒட்டிண்டு இருக்கேன் .

சரி விஷயத்துக்கு வருவோம் . அடுத்த நா காத்தாலே டாண்ணு
எட்டு மணிக்கு நேத்திக்கு வந்த பிராமணன் வந்து நிக்கறார் ,
Calling பெல்லுக்கு அவசியம் இல்லாமல் கதவு திறந்து இருக்க .

“சார் எம்பேரு நாணா (எ ) நாராயணன். நேத்து வந்திருந்தேன் “


அந்த கீச்சு குரலும் முகமும் பரிச்சியமானதா இருந்தது ,


“நீங்க மாம்பாக்கம்   மணி ஐயர் பிள்ளையா ?”
“அடடே சரியா சொல்றேள் ,நீங்க ?”
“நீங்க என்னடா நீங்க ; நான் கோடி ஆத்து குப்புசாமி ஐயர்
பிள்ளை குமாருடா ,என்னை எப்படிடா  மறந்தே ?”


அப்புறம் என்னென்னவோ பழைய கதைகள் பேசி ஆச்சி .
எங்கப்பாவும் ஒரு  பாகவதர்தான் . அந்த நாளிலே ஆரணி
கொசப்பாளையம் ராமர் கோவில் தெருவை  சுத்தி மார்கழி
மாத திருப்பாவை திருவெம்பாவைக்கு அரை ட்ரையாருடன்  
வீதி பஜனை போன கதையெல்லாம் பேசினோம் .


“டீ நாணாவுக்கு காபி கொண்டா ;அப்படியே நேக்கும்
ஒரு முழுங்கு . டேய் இவ்ளோ நாள் கழிச்சி பாக்கறோம் இருந்து
டிபன் சாப்பிட்டுதான் போகணும் “
“இல்லேடா குமார் நான் நிறைய இடம் போகணும் ;காபி
போறும். இன்னொரு நா வரேன் .  நம்ப ஊரிலே வருஷாவருஷம்
ராம நவமி வரச்சே சீதா கல்யாணம் பண்றோம் . இது பதினெட்டாவது
வருஷம் . நேத்திக்கே மாமிகிட்டேன்னா அம்பதோ நூறோ வாங்கிண்டு
போயிருப்பேன் .நீ நம்ப ஊரு .ஆயிரம் ரூபா பிரிண்ட் பண்ண ரசீதிலே
பேரை எழுதிக்கிறேன் . உங்கப்பா எவ்ளவோ செய்ஞ்சிருக்கா .உனக்கு
இது ஒண்ணும் பெரிசில்லெ “


ஹும் நாணா வாங்கிண்டு கிளம்பிட்டான்


“நேத்திக்கே கொடுத்திருந்தால் நூறோட போயிருக்குமா ; உங்களுக்கு  
மனசே வராதே “


வாசலில், மீண்டும்  நாணா


“குமார் வண்டி சாவியை இங்கே வச்சுட்டேன் ; எடுத்துக்கறேன் . அப்புறம்
அடுத்த சீதா கல்யாணத்தில் பிரவரம் சொல்லும்போது நீங்க ரெண்டு பேரும்
சீதைக்கு தாயார் தோப்பனார் ஸ்தானத்திலே இருந்து நடத்தி கொடுக்கணும் .
ருபாய் பத்தாயிரம் ரெடி பண்ணி வச்சுக்கோ .வரேன் .”


“ஹாலில் மாட்டியிருந்த பட்டாபிஷேக படத்துலேந்து ராமர் என்னை

பார்த்து சிரிக்கற மாதிரி தெரிந்தது .

Sunday, 3 September 2017

முதல் சம்பளம்.
==============
"அப்பா , நாங்க பத்து பன்னிரண்டு பேர் இப்போ பேங்க்லே இருக்கோம் . முதல் சம்பளம் (ஐந்து லக்கம் ) வாங்கியாச்சு . எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு பணம் அனுப்பிண்டு இருக்கா . நான் இப்போ உங்களுக்கு எவ்ளோ அனுப்பட்டும் ?"
வருடம் 2003.பிலானியில் படித்து கேம்பஸ் சில் தேர்வாகி ஒரு
நவரத்தினா PSU வில் வேலையில் சேர்ந்த பையன் தொலைபேசியில் கேட்கிறான் .
" நேக்கு ஒண்ணும் வாணாம்பா . நீ அனாவசியமாக
செலவு பண்ண மாட்டாய் . எந்த கெட்ட பழக்கமும்
 இல்லை . யாரையும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்துடாதே . பத்திரமா சேத்து வச்சுக்கோ . நாலு பேர் அனுப்பரான்னு நீயும் அனுப்பவேண்டிய அவசியம் இல்லை . இதுதான் நான் சொல்ல ஆசைப்படறேன் .
எனக்கு வோணும்ன்னு தேவை ஏற்பட்டா உன்னை தானே கேப்பேன். "

இதுவரை அப்படி ஒரு தேவை ஏற்படலை .

ஒரு Flashback. ஒரு Paper Adjustment

================================
வருடம் 1973 . ஆரணி (அன்றைய வ.ஆ.மாவட்டம் ) என்ற
 ஊரில் வாசம் .படித்து (தண்ட சோறு பட்டத்துடன்) வேலை இல்லாமல் சுற்றி திரிந்த காலம் . எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஐந்து பிள்ளைகள் மூன்று பெண்கள் . அப்பாவும் ஓய்வூதியம் பெறுபவர் .கொஞ்சம் சிரம ஜீவனம்தான் . நாங்கள் குடியிருந்தது பட்டு ஜவுளி வியாபாரம் செய்யும்
ஒரு செட்டியார் வீடு .
"சாமி உங்க பையன் சேகரு உத்தியோகம் கிடைக்கறவரை நம்ம கடையில வேலை செய்யலாமே ? ஏதோ பார்த்து ஒரு சம்பளம் போட்டுக்கலாம் "
"சரி செட்டியார் ஒண்ணாந்தேதிலேந்து வர சொல்றேன் "
அப்பா ஒரு வழியா சொல்லிட்டார் . பட்டு ,சரிகை எல்லாம் எடை போட்டு நெய்பவர்களுக்கு கொடுப்பது ; நெய்துவரும்  புடவைகளை எடை போட்டு எடுத்து செய்கூலி சேதாரம் பார்த்து கணக்கெழுதி பணப்பட்டுவாடா செய்வது இத்யாதி வேலைகள் ஒதுக்கப்பட்டன. வேலையில் சேர்ந்த முதல் அய்யர் பையன் . காலை மாலை டீ உண்டு .
அப்பா குடியிருந்த அனைத்து வீடுகளிலும் முதல் தேதி வாடகை கொடுத்து ஒரு சின்ன டைரியில் கையெழுத்து வாங்கி வைத்து கொள்வார் .
முதல் சம்பளம் வாங்க வேண்டும் . அப்பாக்கும் செட்டியார்க்கும் இடையே நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி அடியேனுக்கு தெரியாது . அப்போதுதான் நான் முதன் முதலாக Paper Adjustment பற்றி அறிந்தேன் . என் சம்பளம் ருபாய் 55/- வீட்டு வாடகை ருபாய் 55 /-
நான் டைரியை எடுத்துப்போய் செட்டியாரிடம் கையெழுத்து வாங்க ,அவர் எனக்கு சம்பளம் கொடுத்ததாக ஒரு நோட்டில் கையெழுத்து வாங்கிக்கொள்வார் .
 இரண்டும் Paper Adjustment லேயே . மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் நான் வேலையை ராஜினாமா செய்தேன் .

Thursday, 1 September 2016

கொழக்கட்டை செய்முறை

கொழுக்கட்டை பண்ணுவது எப்படி ? சுலபமான எளிய வழி முறை .

எனது தம்பி மனைவி திருமதி வித்யா ஹரிஹரன் போன் மூலம் சொல்லி கொடுத்தது சரியாக புரியவில்லை என்று சொன்னதால் ,பண்ணும்போது வீடியோ எடுத்து அனுப்பி புரிய வைத்தார் .செய்து பார்த்தபோது மிக அருமையாக மாவு கையில் ஒட்டாமலும் சொப்பு உடையாமலும் செய்ய
முடிந்தது  . வாழ்த்துக்கள் வித்யா ஹரிஹரன் .






Sunday, 25 October 2015

ஆசிரியரை பார்த்து மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் இறைவனை காணலாம் என்கிறீர்கள். என் எதிரில் இறைவனைக் காட்டுங்கள் அப்பொழுதுதான் நான் நம்புவேன் என்றான்.

என்னுடன் வா உனக்குக் காட்டுகிறேன் என்ற ஆசிரியர் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றார்.


ஆற்றங்கரையை  அடைந்த இருவரும் நீரில் இறங்கினார்கள். திடீரென்று அவர் மாணவனுடைய தலையை நீருக்குள் அமிழ்த்தினார். மூச்சுத் திணறிய அவன் துடிதுடித்தான். சில வினாடிகள் சென்றதும் அவர் அவனை விட்டார்.




நீருக்கு மேலே வந்த அவன் பரபரப்புடன் மூச்சை இழுத்துவிட்டான்.

எப்படி இருந்தது? என்று கேட்டார் அவர்.


மூச்சுவிட வேண்டும் என்று நான் துடிதுடித்துவிட்டேன் என்றான் அவன்.

நீருக்குள் இருந்தபோது முச்சுவிட எப்படி துடித்தாயோ அப்படிப்பட்ட உயிர்துடிப்பு இறைவனைக் காணவேண்டும் என்று உன்னுள் எழ வேண்டும். அப்படி எழுந்தால் நீயும் இறைவனைக்காணலாம் என்றார் அவர்.


Thursday, 18 June 2015

பண்டரி யாத்ரா

பண்டரிபுரம் சென்ற நாங்கள் ஜூன் 12 ,2015 இரவு 8 to 10 ரெங்க 
மண்டபத்தில் பஜனை செய்ய online லே அனுமதி வாங்கியிருந்தோம் .                                                                                                    
அதன்படி ஸ்ரீ ராமமூர்த்தி பாகவதர் மற்றும் ஸ்ரீ ராதாகிருஷ்ண பாகவதர் முன்னின்று வாத்திய கோஷ்டி சகிதம் பஜனை இனிதே நடந்தது . அதற்கு பின் விட்டலனை தரிசித்து தங்கும் இடம் வரும் நேரம் எல்லம்மா என்ற மாம்பாக்கம் கிராம ஸ்த்ரி தெரியாமல் ஒரு நாய் மேல் கால் வைத்துவிட அது அவரை கடிக்க அந்த நேரம் மருத்துவ உதவி கிடைக்காமல் மஞ்சள் தூள் வைத்து தற்காலிக சிகிச்சை செய்யப்பட்டது .பொதுவாக மகாராஷ்டிராவில் டாக்டரை காலை  11 மணிக்குதான் பார்க்க முடியும் .மேலும் கூட வந்தவர்களில் யாருக்கும் மராட்டி தெரியாததால் என்னிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் அலைந்து ஒரு டாக்டரை கண்டுபிடித்து அவருக்கு தடுப்பூசி போட்டு தங்கி இருந்த இடம் அழைத்து வந்தேன் .கிராமத்து மக்கள் வாழ்த்தினர்.

Monday, 1 June 2015

பால்ய விவாஹ காலத்தில் பெண்கள் தப்பிப் போவதற்கு ரொம்பவும் 

குறைச்சலாகதான் chance இருந்தது. ஒரு பெண்ணுக்குத் தாம்பத்ய 

எண்ணம் வருகிறபோதே அவளுக்குப் பதி என்ற ஒருத்தன் 
இருந்துவிட்டதால், அவனிடம் மட்டுமே 

அவளுடைய மனஸ் போயிற்று. இந்த எண்ணம் ஏற்பட்ட வயஸுக்கப்புறமும் 

கலியாணமாகாமல் இருப்பது என்று ஏற்பட்டால், அப்போது மனஸ் பல
 தினுஸாகப் 

போகிறது; சித்த விகாரம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி சாரதாச் சட்டத்திலிருந்து 

ராஜாங்க ரீதியாகவே ஏற்பட்டு விட்டதால், எங்கள் கையைக் கட்டி போட்டுவிட்ட 

மாதிரிதான் ஆகிவிட்டது. ஆனாலும் நினைத்து நினைத்து எத்தனையோ 
சட்டங்களை 

மாற்றுகிற மாதிரி, இதையும் மாற்றுவதற்கு அவர்களை (ஸர்க்காரை)த் 
தூண்டிவிடுகிற 

ரீதியில் public opinion-‍ஐ create பண்ண [வெகு ஜன அபிப்ராயத்தை உண்டு பண்ணி] 

முடியுமா என்பதால்தான், இந்த விஷயத்தில் நான் முழுக்கக் கை கழுவாமல் எடுத்துச் 

சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பெண்களுடைய மனோபாவம், பெண்ணைப் 

பெற்றவர்களுடைய மனோபாவம் எல்லாமே இப்போது விபரீதமாக மாறி, 

கல்யாணத்துக்கு முயற்சி பண்ணாமல் காலேஜில் co-education முறையில் [ஆண் 

மாணவர்களோடு கூட்டுப் படிப்பு] படிப்பது, அப்புறம் புருஷர்களோடு உத்யோகம் 

பண்ணுவது என்றெல்லாம் ஆகி வருகிறதைப் பார்க்கிற போது, உள்ளுக்குள்ளே ரத்தக் 

கண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர, ஏதாவது பண்ணமுடியுமா என்று நம்பிக்கை 

போய்க் கொண்டுதான் இருக்கிறது.( மகாபெரியவா " தெய்வத்தின் குரல்") 





Wednesday, 25 February 2015

அண்ணா நகர் டவர் பார்க் ;அந்தி சாயும் நேரம்

அறுபத்துஎட்டு வயசுப்பாட்டி மடிசார் புடவையில்
"என்ன காமுப்பாட்டி சௌக்கியமா ? என்னை
தெரியறதோ ?"
"சரியா தெரியல்லை நங்கநல்லூர் கோமு
மாதிரி இருக்கே ;கண்லே காட்ராக்ட்"

"இல்லை பாட்டி நங்கவரம் பாகீ ;எவ்ளோ வருஷம்
ஆச்சு பாத்து ;இங்கே எப்படி ?"

"ஆமாண்டி கிராமத்துலே எல்லாத்தையும் வித்து
பட்டணம் வந்து வருஷம் பாத்து ஆறது "




"நானும் U.S. போய் பன்னேண்டு வருஷம் ஆச்சு ;
மாமனார் தவறிட்டார் .இங்கே மச்சினர் ஆத்திலே
நேத்திக்கு சுபம் .அடுத்த வாரம் கிளம்பறேன் .இங்கே
தனியா உக்காந்துண்டு என்ன பண்றேள் ?"

"ஆமாண்டி ;இங்கே எதிர்க்க தான் ஆஹம். B.P.,Sugar
டாக்டர் வாக் போக சொன்னார் ;சாயங்காலம் செத்த
இப்படி போனா ஆறு மணிக்கு பக்கத்து ஐயப்பன்
கோயில் தர்சனம் பண்ணிண்டு போக சரியாயிருக்கும் ."

"பேரன் பேத்தி எல்லாம் ?"

"பேரன் ரெண்டு பெரும் U.S."பேத்திக்கு படிப்பு
போதலை "

"தாத்தா போன வருஷம் கணக்கை முடிச்சுண்டு
போய்ட்டார் .அவர் வச்சிண்டு இருந்த பெரிய ஆபீஸ்
ரூம் காலி ஆச்சு "

"சரி "

"அபி B.A. முடிச்சா .என்னமோ டிப்ளமா பண்ணா .என்னமோ
beauty parlour course,facial அப்படின்னு பண்ணா "

"ஹும்"

"இப்ப தாத்தாவோட ஆபீஸ் ரூம் பூரா ஏ.சி.பண்ணி
என்னவோ SPA வோ என்னவோ சொல்றாளே அது
ஆரம்பிச்சிருக்கா ; இந்த படி மேலே நின்னு பாரு பெரிய
போர்டு தெரியும் ;மொதல்லே இவளே பண்ணா ;
இப்ப ரெண்டு பொண்களை போட்ருக்கா "

"போன் லே appointment பிக்ஸ் பண்ணி ஸ்லாட்
குடுத்து பணம் வாங்கறதை இப்ப பாத்துகரா"

"அதில்லை பாட்டி ஆச்சாரமான சாஸ்திரி ஆத்து
குடும்பம் ;இப்ப ஆத்து உள்ளயே சலூன் னா?"

"என்ன பண்றதுடி ;இப்ப புழப்பை தேடி நீ கடல் தாண்டி
போலையா? ஏதோ இதெல்லாம் பாக்காமா அவர் போய்
சேர்ந்துட்டார் ;நேக்குதான் வேளைவல்லை "

"நான் வோண்ணா ரோட்டை கிராஸ் பண்ணி உடவா?"

"வாணான்டி ;இன்னிக்கு பண்ணிட்டா ஆச்சா ;நான்
பாத்துக்கறேன் ;அப்புறம் ஆத்துலே வந்து ஒரு காபி
சாப்ட்டு போடி "